WORD OF GOD

WORD OF GOD

Thursday, January 27, 2011

கவிதை பூ

இயேசு எனது தந்தை

இயேசு எனது அப்பா!
அவர் மடியில்
தவழும்
நான் ஒரு மழலை,
                                             
                                                                 
நான் அருந்திய பால்
அம்மா பால் அல்ல,
அப்பா பால்!
அவரது குருதி,
எனது தாய் பால்!

அதனால் என்னை
அப்பா பிள்ளையா?
அம்மா பிள்ளையா?
என்று யார் எப்போது
கேட்டாலும்
தப்பாது சொல்வேன்,
நான்
அப்பா பிள்ளைதான்!

என் அப்பாவின்
இதயம் ஓர்
வெள்ளைத் தாள்!
அதில்
பாவம் என்னும்
என் எழுதுகோல்
கீரியதுண்டு,
காயங்களை அவர்
பெற்று,
மீட்பு என்ற
சுகத்தை,
எனக்கு அளித்தார்!
அவர் எனக்கு
இரட்ச்சிப்பு "பூ"
வாங்கித் தந்தார்!

அவர் சொல் புதிது!
செயல் புதிது!
புதியதோர்
ஆண்டு
பூத்தது

இந்த புதிய ஆண்டில்,
அவர்
அன்னையாய்-தந்தையாய்,
அன்பராய்-நண்பராய்,
ஆசானாய்,
ஆலோசனை கர்த்தராய்,

புரிகிறது!
அவர் என் அப்பா!
நான்
அப்பா பிள்ளை!

மகிழ்ச்சி பொங்க,
மனநிறைவு
பூத்து பொங்க,
இன்பம் நிலைக்க,
என் இயேசு
எப்போதும்
இப்புத்தாண்டில்
எனக்கு வேண்டும்!

ஏனெனில் என்றும்
நான் அப்பா பிள்ளை தான்.

கவிதை பூ சூடியவர்

திரு ஆ.ஏசையன்.  கவிஞர்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews