WORD OF GOD

WORD OF GOD

Saturday, January 29, 2011

என் இதயத்திலிருந்து



அன்பானவர்களே கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ....

 இந்த தளத்தை நான் உருவாக்க காரணம் இறைவனின் நாமம் மகிமையடைய வேண்டும் என்பதே, ஆனாலும் இந்த தளம் அனைவரையும் சென்றடைந்தால் மட்டுமே இந்த நோக்கம் நிறைவேறும். எனவே இதை எப்படி அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது என்று நான் யோசித்த வேளையில் என் உற்ற  நண்பரும், என் சகோதரருமான அண்ணன் அருள்திரு கிளாட்சன் அவர்கள் இதை அனைவருக்கும்  அறிமுகப்படுத்தும் வகையில் தன் சொந்த செலவில் 1000  கை பிரதிகளை அச்சிட்டு கொடுத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் அவருக்கு என் இதயத்திலிருந்து நன்றிகள். இதை பதிவிட வேண்டாம் என்று அவர்  கேட்டுக் கொண்டாலும் அன்பின் நிமித்தம் இதை நான் பதிவிட வேண்டியுள்ளது.

அருள்திரு S . ராஜகம்பீரம் முன்னாள் பெருந்தலைவர் I .E .L .C   அவர்கள் கடந்த  26 ம் தேதி நடந்த வாலிபர்  எழுச்சி விழாவில் இந்த என்னுடைய முயற்ச்சியை ஜெபித்து ஆசீர்வதித்தார் அவருக்கு என் மனமார்ந்த  நன்றிகளை என் இதயத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரி மேரி கேதலின் அவர்களே உங்கள் கருத்துரை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது உங்களை இந்த தளத்தில் மனமார வரவேற்கிறேன், உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். உங்கள் பாராட்டுகளுக்கு இதயத்திலிருந்து நன்றிகள்.

பெயர் போடாமல் கருத்துரையிட்டிருக்கிரவருக்கு  என் நன்றிகள். தயவு செய்து உங்கள் பெயரை பதிவிட்டால் அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாகும்.

தளத்தை பார்வையிடும் அனைவரும் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அதுதான் எனக்குள்  ஆண்டவருக்காய் உழைக்கும் ஆர்வத்தை அதிகமாக்கும், உங்கள் ஆதரவின்றி இதை என்னால் தொடர முடியாது.

எந்த வியாபார நோக்கமும் இல்லாத இறைப்பணி ஊழியமாக இது இருக்கும் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இதய பூர்வ நன்றிகளுடன்

அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews