WORD OF GOD

WORD OF GOD

Thursday, February 3, 2011

காலை மன்னா 03.02.2011













அன்பான உடன் விசுவாசிகளே இந்த காலை நேரத்தில் உங்களை வாழ்த்துகிறேன், ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இன்றைய தியான வசனம், ஏசாயா.58 :11 .


சரீர ஆரோக்கியம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான் ஒன்று, ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நம்மால் இயல்பாக செயல்பட முடியாமல் முடங்கி போகிறோம். நம்முடைய ஆரோக்கியம் தான் நம்மை செயல்படுகிற மனிதனாக வைத்திருக்கிறது.

எனவே ஆரோக்யத்தை பற்றிய கவனம் மிக முக்கியமானது. ஆனால் பல நேரங்களில் நம்முடைய பணியின் நிமித்தமாக,  அவசர வாழ்வின் நிமித்தமாக, நம்முடைய சரீர நலனை பற்றிய நியாபகம் இல்லாமல் நடந்துக்கொள்ளுகிறோம் , ஏன் அக்கறை இல்லாமல் நடந்துக்கொள்ளுகிறோம் என்று கூட சொல்லலாம், ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் கொடுத்திருக்கிற மிகப்பெரிய ஆசீர்வாதம் இந்த சரீரம் தான்.

நமுடைய தியானப் பகுதியில் கடவுள் ஏசாயா தீர்க்கரின் வழியாக இஸ்ரவேல் மக்களுக்கு சொல்லுகிற செய்தி, உன்னை நான் வழி நடத்துவேன், வறண்ட காலத்தில் திருப்தியை தருவேன், உன் எலும்புகளை நினமுள்ளதாக்குவேன்.  நீர்பாய்ச்சலான   தோட்டத்தை போலவும் வற்றாத நீரூற்றை போலவும் இருப்பாய் என்று சொல்லுகிறார்.

பொதுவாக நம்முடைய ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் போகிரதற்கான காரணங்கள்.

நாளைக்கு என்ன செய்ய போகிறோம் என்ற எதிர்காலத்தை பற்றிய பயத்தில் இந்த நாளின் சந்தோஷத்தை மறந்து ஓடிக்கொண்டிருப்பதால், எத்தனையோ பேர் சரியாக சாப்பிடாமல், ஓய்வெடுக்காமல் கடுமையாக் உழைப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஆனால் கடவுள் சொல்லுகிறார் நான் உன்னை வழி நடத்துவேன்.

வறுமை நிமித்தமாக, இழப்புகள் நிமித்தமாக, அநேகர் தங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் தங்கள் நிலையை பற்றி கவலை பட்டு, தங்கள் நிலையில் ஒரு மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தோடு வாழ்கிறோம். கடவுள் சொல்லுகிறார் மகா வரட்சியான காலத்தில் நான் உன்னை, உன் ஆத்துமாவை திருப்தியாக்குவேன் என்கிறார்.

இவை மட்டுமல்ல இன்னும் அனேக காரணங்களுக்காய், அதாவது, குடும்ப பிரச்சனைகள், வேலையில் உள்ள பிரச்சனைகள், எதிர்ப்புகளை பற்றிய பயங்கள், தேவையற்ற சிந்தனைகள் போன்றவற்றால் அநேகர் ஆரோக்யத்தை பற்றி கவலைபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். கடைசியாக கடவுள் சொல்லுகிறார் உன் வாழ்வை பசுமையான, அழகான தோட்டத்தை போலவும், எந்த காலத்திலேயும் வற்றி போகாத நீரூற்றை போலவும் உன் வாழ்வை மாற்றுவேன் என்று வாக்குரைக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக உன் எலும்புகளுக்கு வலிமை தருவேன் என்கிறார். எனவே இந்தக் காலை வேளையில் மகிழ்ச்சியோடு நம் பணிகளுக்கு புறப்பட்டு போவோம், நம் வழியும், நம் வலிகளும், நம் இக்கட்டுகளும் எதிர்ப்புகளும் நம் இறைவனுக்கு தெரியும், நம் வாழ்வை எதேன் தோட்டமாய் மாற்ற நம்மோடு பயணித்து வருகிறார், எனவே நம் வாழ்வை பற்றி பயப்படாமல் நம் ஆரோக்யத்தில் அக்கறை உள்ளவர்களாய் இருப்போம்.  இறைவன் கொடுத்த் இந்த மிகப்பெரிய போக்கிஷமாகிய சரீரம் ஆரோக்யமாக  இருந்தால் தான், இறைவன் தரப்போகிற  நம்முடைய வாழ்வின் மேனமைகளை அனுபவித்து சாட்சிகளாய்  வாழ்ந்து அவர் சித்தம் நிறைவேற்ற முடியும்.

குறிப்பாக மாணவர்கள் இந்த தேர்வு காலங்களில் எந்த அளவுக்கு அக்கறையோடு படிக்கிறீர்களோ அதே அளவுக்கு, ஆரோக்யத்திலும் கவனமுள்ளவர்களாய் இருங்கள் ஆரோக்யத்தை கெடுக்கும் எதையும் செய்யாதீர்கள் இறைவன் கொடுக்கும் வெற்றியை கொண்டாட முடியாமல் போகக்கூடும்.

நமக்கான சக்தியை இறைவன் நம் எலும்புகளுக்கு கொடுத்து, நம்மை காத்துக்கொள்வார். வெற்றியை ருசிக்க செய்து இயேசுவின் அற்புத வழி நடத்தலை உணர  செய்வார். எனவே இந்தக் காலை ஆரோக்யமான காலையாக அமைய இறைவன் நம்மை காத்துக்கொள்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews