WORD OF GOD

WORD OF GOD

Wednesday, February 2, 2011

காலை மன்னா 2.02.2011

அனபானவர்களே இந்த காலை நம்மோடு இறை செய்தியை பகிர்ந்துக்கொள்ள போகிறவர் எனது நண்பரும் போதகருமான அருள்திரு மில்டன் அவர்கள், இனி ஒவ்வொரு புதன் கிழமையும் அருள்திரு மில்டன் அவர்கள் இறை செய்தியை பகிர்ந்துக் கொள்வார்கள்.


பத்திரமாக வீடு திரும்புவோம்
சங்கீதம்.107 :23 -26 

23. கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.

24. அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும் ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.

25. அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

26. அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது
 

அன்பான ஆண்டவருடைய பிள்ளைகளே, காலை வணக்கம்.

நாம் தினந்தோறும் நம்முடைய பணிக்காக வெளியில் சென்று, பணியை முடித்து எத்தனை பேர் பத்திரமாக வீடு திரும்புகிறோம்?

எண்ணில்லா ஆபத்துகள் நம்மை சுற்றி நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, தீவிரவாதிகள், குண்டு போட்டு உயிர்களை கொல்லுகிறார்கள் , பெரிய விபத்துக்கள் நடக்கிறது, இதனால் நாம் பயப்படுகிறோம்.

எதிர்காலத்தை நினைத்து பயம்:

நாம் அனைவருமே எதிர்கால வாழ்வை எண்ணி பயப்படுகிறோம். நம்மால் எவ்வாறு சுகமாக வாழ முடியும்? என்று நம்பிக்கையில்லாமலே வாழ்கிறோம்.
சங்கீதம்:107:23-26ல்  கப்பல் பயணத்தைப் பற்றி, கூறுகிறார். கப்பல் பயணம் என்பது, ஆபத்து நிறைந்தது, புயல், ஆழம், அலை போன்ற பெரிய ஆபத்துக்கள் நிறைந்தது, கடலில் பயணம் செய்கிறவர்கள் பயந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது என்ன ஆபத்து வரும் என்று தெரியாது..

1912  ம்  ஆண்டு ஜெர்மன் தேசத்திலிருந்து புறப்பட்ட பெரிய பிரம்மாண்டமான கப்பல் TITANIC , மூழ்காத கப்பல் என்று சொல்லப்பட்டது, ஆனால் பயணம் செய்த சில நாட்களிலேயே பனி பாறையில் மோதி மூழ்கியது, அநேகர் மரித்துபோனார்கள்.

ஆனால் நம்முடைய வாழ்க்கை பயணத்தில், நாம் பயணம் செய்கிற கப்பலை இயக்குகிறவர் இயேசு ஆண்டவர், அவர் நம்மை பத்திரமாக கரை சேர்ப்பார், பயப்பட வேண்டாம், மழை, புயல், பெரிய அலை, பனிபாறைகள் இது போல் நம் வாழ்வில் பிரச்சனைகள், பயம், தனிமை, மரணம், கைவிடப்படல், நோய், கவலை, . போன்ற பல பிரச்ச்சனைகளிலிருந்து கடவுள் நம்மை வழி நடத்துவார். வீட்டிற்கு நம்மை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பார்,.

எபிரெயர்:6 :17 -19 விசுவாசம் என்பது  நங்கூரம் போல் காணப்பட வேண்டும், என்று சொல்லபடுகிறது.

நிலையான நம்பிக்கை:

நம்முடைய நிலையான நம்பிக்கை ஆண்டவராகிய இயேசுவின் மீது, வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு பயணிக்கிறார், நம் விசுவாசம் நங்கூரம் போல் காணப்பட வேண்டும்.

ஏசாயா:33:20-22 ன் படி கடவுள் நம்முடைய நியாயாதிபதி, அரசன், அவர் நம்மை இரட்சிப்பார். ஆகவே பயப்படாமல் இந்த புதிய மாதத்தில் பயணம் செய்வோம். கடவுள் நம்மோடு இருக்கிறார், அவருடைய வாக்குத்தத்தத்தில் நம்பிக்கை வைப்போம், கடவுளின் வார்த்தை நிலையானது மாறாதது.

கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவுக்குள்ளாக
அருள்திரு, மில்டன் அருண்ராஜ் BA,BTh
revmilton1982@gmail.com

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews