WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 12, 2011

வேத வினா போட்டி

அன்பானவர்களே வேதவினா  போட்டிக்கான பதில்களை மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே அனுப்புங்கள், தயவுசெய்து கருத்துரையில் பதிலளிக்காதீர். நீங்கள் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி (ஈமெயில்) jesusblessings65@yahoo.in .
இந்த மாதத்திற்குரிய வேத வினா போட்டிக்கான வினாக்களை தயாரித்து கொடுத்தவர் அருள்திரு.மில்டன் அருண்ராஜ்.

ஆதியாகமம்

1 .ஆதிமுதல் சர்வவல்ல இறைவனின் வாயின் சத்தத்தில் பூமியில் பிறந்தவை இரண்டு, அவை யாவை?

2 . ஏதேனில் புறப்பட்ட ஒரு நதியினின்று பிரிந்து சென்ற நான்கு நதிகளின் பெயர்கள்      என்ன?

3 .கடவுள் மனிதனை எப்படி படைத்தார்?

4 .ஆதாமின் வம்சத்தில் அதிக நாள் உயிரோடு இருந்தவன் யார்?

5 .மகா சரீரிகள் அல்லது பேர் பெற்ற பலவான்கள் யார் யாருக்கு பிறந்தவர்கள்?

6 ."இந்த சந்ததியாரில் உன்னை நீதிமன் என்று கண்டேன்" என்று கடவுள் யாரைப்பார்த்து சொன்னார்?

7 .ஆபிரகாமின் அப்பா பெயர் என்ன?

8 ."பார்க்கிற கடவுள்" என்று கடவுளுக்கு பேரிட்டது யார்?

9 ." யெகோவாயீரே " இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன? யார் சொன்னது? யாருக்கு     சொன்னது?

10 .நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? இக் கேள்வியை யார் யாரிடம்? எந்த இடத்தில் கேட்டார்?

பதில்களை  அனுப்பவேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 25 .
விடைகளை வசனத்தோடு குறிப்பிடவேண்டும்.
உங்கள் முழு விலாசத்தையும் குறிப்பிட வேண்டும்,
புகைப்படம் அனுப்பினால் வெற்றிபெற்றவர்கள் புகைப்படம் பிரசுரிக்கப்படும்.
பரிசு பெற்றவர்கள் விவரம் மார்ச் முதல் தேதி அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews