WORD OF GOD

WORD OF GOD

Thursday, February 24, 2011

அருளுரைக்கிறார் ஆயர்



விசுவாசிகள் இப்போது
அவிசுவாசம் என்னும்
சிறையில் இருக்கிறார்கள்
வேத வனத்தில் அல்ல
போக வனத்தில்

வேதம்  இன்று
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய்  இல்லாமல்  
பையில் சுமக்கும்
மூட்டையாய் மாறிவிட்டது

 கொடுமை  என்னவெனில்
சபையார் எல்லாம்
சண்டை பிரியராய்
உருமாறி வருகின்றனர்...
அமைதி இங்கே
ஆழக் குழிவெட்டி
அதில் போய்
படுத்துக்கொண்டது
அன்பு இங்கே
துன்பப்பட்டு துக்கப்பட்டு
மூச்சடங்கி
நொடிந்து மடிந்து
முடங்கிப் போனது,....

நீயா நானா?
வாய்யா பார்க்கலாம்
என்று எக்காளம்
ஊதுகிறது சுயநலம்.

இயேசு தன்னை
இலட்சியம் செய்யாததால்
இங்கே சர்வசிருஷ்டிகர்......
சங்கடப்படுகிறார்..

இறைமைந்தர் இயேசுவை 
புறமதத்தவர் மத்தியில்..
ஏலம் போடுகிறார்கள்
இங்கே சுயநலவாதிகள்......

பிதாவின் கையில் 
பிரம்பு இருந்தது....
அஞ்சி அடங்கினர் 
அக்கால மக்கள்.......

மைந்தரின்  கையில்
மன்னிப்பு தவழ்கிறது
பிள்ளைகள் இன்று....
பதவி பித்தாய்
அலைகிறார்கள்.......

சன்னலை திறந்தேன்
சூரிய ஒளியால்
அறைக்கு இன்று
விடுதலை கிடைத்தது......


விவிலியத்தை திறந்திடு
இவைகளுக்கெல்லாம்
விடுதலை எளிதாய்
கிடைத்துவிடும்......

இனிவரும் காலம்
இனிதாய் தொடங்கும்
இன்பமாய் தொடரும்
இறை ஆசியால்
இறுதிப் பெறும்.........

தந்தை மைந்தர் தூயரின்
அருட்பெயரால் ஆமென்.....

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்



மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews